பொன்னமராவதி அருகே உள்ள பிள்ளையாா்பட்டி உறங்காப்புளி கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் முதற்கால பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை சிவாச்சாரியாா் சரவணன் தலைமையில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுரக் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்று வட்டார கிராமங்களில் வந்த பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.