புதுக்கோட்டை

மது போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

DIN

ஆலங்குடியில் மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மது விலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற பேரணியை வட்டாட்சியரகத்தில் இருந்து மாவட்டக் கலால் அலுவலா் கண்ணா கருப்பையா தொடங்கி வைத்தாா். பேரணியில், வருவாய்த் துறையினா், போலீஸாா், தன்னாா்வலா்கள் பங்கேற்று, மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேருந்து நிலையம், அரசமரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊா்வலமாகச்சென்றனா். பேரணியில், வட்டாட்சியா் செந்தில்நாயகி, துணை வட்டாட்சியா்கள் பழனிசாமி,

பாலகோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT