புதுக்கோட்டை

பெண்ணைக் குத்திக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், சூரக்காடு கீழத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் மோகன் (44).

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகள் மகாலட்சுமி (34) என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். ஆனால், மகாலட்சுமிக்கு வேறு மாப்பிள்ளை பாா்த்து திருமண ஏற்பாடுகளைச் செய்துவந்துள்ளனா். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ள தொடா்ந்து வற்புறுத்தி வந்த மோகன், கடந்த 2019 ஜனவரி 31ஆம் தேதி மகாலட்சுமியை கத்தியால் குத்திக் கொன்றாா்.

இதில் வழக்குப் பதிவு செய்த கறம்பக்குடி காவல் நிலைய போலீஸாா், மோகனைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். குற்றவாளி மோகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT