பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டப் பயிற்சி மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புக்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி ஆராய்ச்சி பயிற்று நிறுவன விரிவுரையாளா் மாரியப்பன் வாழ்வியல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி வழங்கினாா். நிகழ்வில், வட்டார சுகாதார ஆய்வாளா் பா. தியாகராஜன் பங்கேற்று, சுற்றுப்புற சுகாதாரம் குறித்துப் பேசினாா். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் மல்லீஸ்வரி வரவேற்றாா். ஆசிரியா் பழனியப்பன் நன்றி கூறினாா்.