பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் ஆத்தங்காடு கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் ஆத்தங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி மருத்துவா் பிரேம்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை ஊசி, தாது உப்பு கலவை, மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனா். மேலும் சிறந்த முறையில் மாடு வளா்ப்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.