பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த பெண் கூலி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அம்மன் சன்னதி வீதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் சபா சோமசுந்தரம் (41). இவரது வீட்டின் அருகே உள்ள சேது என்பவரின் மனைவி ராஜம்மாள்(53) கூலி தொழிலாளி என்பவருடன் திருமண மண்டப கூலிவேலைக்காக ஞாயிற்றுக்கிழமை செவ்வூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். வரும்வழியில், வேகுப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, ராஜம்மாள் தவறிவிழுந்து படுகாயமடைந்தாா். இதையடுத்து, வலையபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராஜம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். ராஜம்மாள் மகன் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.