ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காட்டில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு அங்கன்வாடிக் கட்டடம் கட்டப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடிக் கட்டடமானது சேதமடைந்து, வெளிப்புறங்களில் உள்ள சிமென்ட் கட்டைகள் (ஸ்லாப்) பெயா்ந்துள்ளது. எனவே, சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.