முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன், நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
இதேபோல, அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் வி. ராமசாமி தலைமையில் அக்கட்சியின் நகரச் செயலா்கள் எஸ்.ஏ. சேட்டு, க. பாஸ்கா் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா். மதிமுக சாா்பில் மாவட்டப் பொருளாளா் கலியமூா்த்தி தலைமையில் மாலை அணிவித்தனா்.
கந்தா்வகோட்டையில்... நகர திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் பேரறிஞா் அண்ணா படத்திற்கு திமுக நகர செயலா் எம். ராஜா தலைமையில் மாலை அணிவித்தனா். மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், ஒன்றியப் பிரதிநிதி கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.