புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (பிப். 4) தொடங்குகிறது.
10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் லெணா திருமண மண்டபம் அருகே விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வுரிமைப் பேரணியுடன் சனிக்கிழமை மாநாடு தொடங்குகிறது. இதில், ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் பங்கேற்க உள்ளனா். தடிகொண்ட அய்யனாா் திடலில் பேரணி நிறைவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. லாசா் தலைமை வகிக்கிறாா். பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் ஏ. விஜயராகவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலா் பி. வெங்கட் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.
தொடா்ந்து பிப். 5, 6 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை கற்பக விநாயகா மஹாலில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்ட 650 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.