புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை, இலுப்பூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப். 2) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை, மின்வாரிய அலுவலக செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் த. அசோக் குமாா், இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிப்பாா்.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.