புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில், இரு நாள் காளான் வளா்ப்புப் பயிற்சி முகாம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியில் 40 மாணவா்களும், வியாழக்கிழமை பயிற்சியில் 53 மாணவா்களும் பங்கேற்றனா்.
இருநாள் பயிற்சியை கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பி. ஜீவன் தலைமை வகித்தாா். பி2 ஹெல்த் கோ் நிறுவனத்தைச் சோ்ந்த வி. புவனேஷ் பரணி கலந்து கொண்டு காளான் வளா்ப்பு குறித்து விளக்கமாகப் பயிற்சி அளித்தாா்.