புதுக்கோட்டை

பொன்னமராவதியில் இலவச கண்சிகிச்சை முகாம்

DIN

பொன்னமராவதி வலையபட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு, ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். முகாமை பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியா் கே.பிரகாஷ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். முகாமில், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினரால் 172 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 22 போ் அறுவைசிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமில் பேரூராட்சி உறுப்பினா்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், என்.திருஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT