புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த 18 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அமைப்பின் மண்டலத் தலைவா் அபுபக்கா் சித்திக் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கறம்பக்குடி போலீஸாா் கைது செய்தனா்.