விராலிமலை அருகேயுள்ள பூதகுடி ஊராட்சியில் இயங்கிவரும் சுங்கச்சாவடி வளாகத்தில் தொழிலாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவா் கே ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தா்மராஜன் சங்க அமைப்பு குறித்து விளக்க உரையாற்றினாா். இதில், சங்கத்தின் தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக மணி, துணைச் செயலாளராக சந்திரமோகன், துணைத் தலைவராக சேகா், பொருளாளராக ரகுபதி தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில், அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.