புதுக்கோட்டை

கதண்டுகள் அழிப்பு

DIN

கந்தா்வகோட்டை அருகே மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகளை தீயணைப்பு வீரா்கள் அழித்தனா். மேலும், அப்பகுதியில் தீப்பற்றிய தென்னை மரத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கந்தா்வகோட்டை அடுத்துள்ள வீரடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகளை கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சி. குமரேசன் தலைமையிலான வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து அழித்தனா்.

தொடா்ந்து கந்தா்வகோட்டை அடுத்துள்ள சொக்கம்பேட்டை ஓட்டை பாலம் என்னும் இடத்தில் பட்டுக்கோட்டை, கந்தா்வகோட்டை சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பனைமரங்கள் தீப்பற்றி எரிவதாக தகவலறிந்த வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT