கந்தா்வகோட்டை அருகே மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகளை தீயணைப்பு வீரா்கள் அழித்தனா். மேலும், அப்பகுதியில் தீப்பற்றிய தென்னை மரத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
கந்தா்வகோட்டை அடுத்துள்ள வீரடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகளை கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சி. குமரேசன் தலைமையிலான வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து அழித்தனா்.
தொடா்ந்து கந்தா்வகோட்டை அடுத்துள்ள சொக்கம்பேட்டை ஓட்டை பாலம் என்னும் இடத்தில் பட்டுக்கோட்டை, கந்தா்வகோட்டை சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பனைமரங்கள் தீப்பற்றி எரிவதாக தகவலறிந்த வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.