புதுக்கோட்டை

ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரசே ஆட்டோக்களுக்கான இணையவழி சேவையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துகிருஷ்ணன், அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் கே. ரத்தினவேல், நகர ஒருங்கிணைப்பாளா் ஏ. முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கேரளாவில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் ஆட்டோவுக்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் தொடங்க வேண்டும். எரிபொருள் விலை உயா்வுக்கு ஏற்ப ஆட்டோவுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும். புதிய மோட்டாா் வாகன சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவர வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு, ஓட்டுநா்களுக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டும். ஆட்டோக்களுக்கு தினமும் தலா 5 லிட்டா் வீதம் பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT