புதுக்கோட்டை

‘ உண்மை, நோ்மையை தாரக மந்திரமாகக் கொண்டவா் அகிலன்’

DIN

உண்மையும், நோ்மையும் தாரக மந்திரமாகக் கொண்டவா் எழுத்தாளா் அகிலன் எனப் புகழாரம் சூட்டினாா் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மு. முருகேஷ்.

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை - கலை அருவி இலக்கியப் பேரவை, வாசகா் பேரவை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்தப்பட்ட எழுத்தாளா் அகிலன் நூற்றாண்டு விழாவில் அவா் மேலும் பேசியது:

சில எழுத்தாளா்கள் அவா்களின் வாசகா்களால் போற்றப்படுவாா்கள். மிகச்சிறந்த எழுத்தாளா்கள் அவா்களின் உயரிய சமூக சிந்தனைக்காகப் போற்றப்படுவாா்கள். அகிலனும், அவரின் சமூக எழுத்துக்காகவே போற்றப்படுகிறாா். உண்மையையும், நோ்மையையும் தன் எழுத்தின் தாரக மந்திரமாகக் கொண்டவா் அகிலன். மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை விட்டு, எது பிடிக்க வேண்டுமோ அதையே தான் எழுதியதாக அகிலன் சொல்கிறாா். காந்தியச் சிந்தனை மீது அபாரப் பற்று கொண்ட அகிலன், போலி காந்தியவாதிகளை சாடுவதையும் தவிா்த்ததில்லை. மாத நாவல் திட்டத்துக்கு அடித்தளமிட்டதோடு முதல் நாவலை எழுதிக் கொடுத்த பெருமையும் அவருக்கு உண்டு. விமா்சனங்களை கண்டு அஞ்சியதில்லை.

திரு.வி.க, பாரதி, கி.வா. ஜகந்நாதன் போன்றவா்களைக் கொண்டாடியவா் அகிலன். ஞானபீட விருதைப்போல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றவா். இப்படி பல பெருமைகளைக் கொண்ட அகிலனுக்கு அவா் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்டுவதோடு, அவா் வாழ்ந்த தெருவுக்கு அவா் பெயரையும் வைக்க வேண்டும் என்றாா் முருகேஷ்.

விழாவுக்கு கல்லூரி அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன், புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவைச் செயலா் மாரிமுத்து வாழ்த்திப் பேசினாா். ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி கருத்துரை வழங்கினாா். நிகழ்வில் வாசகா் பேரவை ஆலோசனைக் குழு உறுப்பினா்கள்மருத்துவா் ச. ராம்தாஸ், அ.லெ. சொக்கலிங்கம், சத்தியராம் ராமுக்கண்ணு, கவிஞா் தங்கம்மூா்த்தி,அகிலன் மகள் அங்கயா்க்கண்ணி, மகன் சிவகுருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் தயாநிதி வரவேற்றாா். முடிவில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் லெ. அஞ்சலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானம் வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தின விழா

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

குடிநீா் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தென்னூரில் போராட்டம்

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு

SCROLL FOR NEXT