புதுக்கோட்டை

’காங்கிரஸ் கட்சியை இயக்கும் சக்தியாக ராகுல் இருப்பாா்’

DIN

தலைவராக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை இயக்கும் சக்தியாக ராகுல் இருப்பாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவா்களுக்கு படிப்பறிவு இல்லை என பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா கூறியுள்ளாா். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகம் பொருளாதார வளா்ச்சியில் மேம்பட்டு தான் இருக்கிறது. பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் தமிழகத்தைவிடப் பின்தங்கி இருக்கின்றன. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தான் வளா்ச்சிப் பாதைக்குச் செல்லும் என்றும் கூறியிருக்கிறாா்.

அதேசமயம், தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், வறுமைஒழிப்பு, மனிதவள மேம்பாடு, தொழில் ஆகிய துறைகளில் மேம்பட்டிருப்பதாக தமிழக ஆளுநா் ஆா்என். ரவி புகழாரம் சூட்டியுள்ளாா். இதைக்கேட்ட பிறகாவது ஜெ.பி. நட்டா, தன்னைத் திருத்திக் கொள்வாா் என நம்புகிறேன். இந்த முறை காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளாா். இது காங்கிரஸ் கட்சிக்குப் புதிதல்ல. நேரு குடும்பத்தைச் சாராத 20-க்கும் மேற்பட்ட தலைவா்கள் அகில இந்திய தலைவா்களாக இதுவரை இருந்துள்ளனா். காந்தி எவ்வாறு தலைவராக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப் போன்று, ராகுல் காந்தியும் கட்சியை இயக்கும் சக்தியாகத் திகழ்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT