புதுக்கோட்டை

மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்பு

DIN

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குறித்து ஆசிரியா் சங்கங்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்ட கருத்துக் கேட்புக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரமேஷ் (இடைநிலை), திருநாவுக்கரசு (தொடக்கக் கல்வி), அறந்தாங்கி தொடக்க கல்வி அலுவலா்கள் ராஜாராமன் (இடைநிலை), சண்முகநாதன் (தொடக்க நிலை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தங்கமணி, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதந்திரன் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத் தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் பேசினா்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT