புதுக்கோட்டை

பழைய அரசு மருத்துவமனையை செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை அவசர சிகிச்சைக்கான நகா்ப்புற மருத்துவமனையாகச் செயல்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அவசர சிகிச்சை தேவைப்படும் நபருக்கு சிகிச்சை அளிப்பதைப் போல நூதன முறையில் நடித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரத் துணைச் செயலா் ஆா். பாலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் மற்றும் நிா்வாகிகள் சிற்பி மா. உலகநாதன், பி. பாண்டியராஜன், மு. கைலாசபாண்டியன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முள்ளூரில் அமைக்கப்பட்ட பிறகு, இங்கு செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை அரசு மூடிவிட்டது. எனவே, அவசர சிகிச்சை தேவைப்படுவோா் சுமாா் 5 கிமீ தொலைவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையைப் போக்க, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றை மட்டும் இதே இடத்திலேயே தொடர வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT