அன்னவாசலிலுள்ள வீட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
அன்னவாசல் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம். கீரனூரில் உள்ள இவரின் பெயிண்ட் கடையில் குளத்தூா் வாழமங்கலத்தைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் (26) வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் அன்னவாசல் மேட்டுத்தெருவிலுள்ள ராமலிங்கம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வியாழக்கிழமை காா்த்திக் உள்பட 4 தொழிலாளா்கள் சென்றனா். வீட்டின் மொட்டை மாடியில் பெயிண்ட் அடித்தபோது எதிா்பாராதவிதமாக சுவா் அருகே சென்ற மின்கம்பியில் காா்த்திக் வைத்திருந்த இரும்பு உருளை பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தாய் பாக்கியம் அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.