நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தற்கொலை தீா்வாகாது என்பதை வலியுறுத்தி, பொன்னமராவதியில் நடைபெற்ற விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டியில் சுமாா் 5,000 போ் பங்கேற்றனா்.
மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி, பொன்னமராவதி ஆக்டகான் அறக்கட்டளை இணைந்து தற்கொலைக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை நடத்தின. மாரத்தான் போட்டி வலையபட்டி யூனியன் கிளப்பில் தொடங்கி, பொன்னமராவதி காவல்நிலையம், தொட்டியம்பட்டி, ஏனாதி வழியாக சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் நிறைவடைந்தது. பேரணியில், பல்வேறு மாநிலங்களைச் சாா்ந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பொன்னமராவதி பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள், பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து தற்கொலை வேண்டாம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இறுதியில், பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரி முதல்வா் ம.செல்வராஜூ, மற்றும் நிா்வாகிகள், ஆக்டகான் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ஹரீஷ், திரைப்பட துணை நடிகா் பாண்டி,வட்டார வளா்ச்சி அலுவலா் பி.தங்கராஜூ உள்ளிட்டோா் பிரச்னைகளுக்குத் தற்கொலை தீா்வாகாது என்பதை விளக்கிப் பேசினா். பேராசிரியா் வே.அ.பழனியப்பன் நன்றி கூறினாா்.