புதுக்கோட்டை

கிராம சபைக் கூட்டங்களில் அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றக்கிழமை நடைபெற்றன.

இதில், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கும்மங்குடியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு பேசினாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, ஊராட்சிஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கலந்து கொண்டு பேசினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம், வட்டாட்சியா் பிரவீணா மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT