புதுக்கோட்டை

போதை பொருள்கள் தடுப்பு, ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.

கந்தா்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கந்தா்வகோட்டை வட்டார மருத்துவத் துறை சாா்பில் நடத்தப்பட்ட விழிப்புணா்வு முகாமிற்கு, புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், பள்ளி ஆசிரியருமான ஆ. மணிகண்டன் தலைமை வகித்தாா். புதுநகா் வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார ஆய்வாளா் மகேஷ்வரன் ஆகியோா் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நபா்களின் செயல்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா். போதை பழக்கத்தால் சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் விரிவாக விளக்கவுரையாற்றினா்.

சிறப்பு பாா்வையாளராக மாவட்ட தொற்றா நோய்கள் மேற்பாா்வையாளா் முத்துதுகுமாரசுவாமி, போதை பழக்கத்தால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக்கூறினாா்.

முகாமில் பள்ளியின் பசுமைப்படை பொறுப்பாளா் ஆசிரியா் மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT