புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநா் இடைநீக்கம்

18th Nov 2022 12:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில், பாா்வைக்குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவரிடம் சலுகைக் கட்டணம் பெறாமல் முழுக் கட்டணத்தை வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள காலாடிசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பாசில். பாா்வைக்குறைபாடுள்ள மாற்றுத் திறனாளியான இவா், புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை பகலில் கல்லூரி வகுப்பை முடித்துக் கொண்டு ஊா் திரும்பும்போது, புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியே மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அந்தப் பேருந்தில் இருந்த நடத்துநா் ஆா். முருகேசன், இவரது அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் சலுகைக் கட்டணம் வழங்காமல் முழுக் கட்டணமாக ரூ. 15-ஐ வசூலித்துள்ளாா்.

இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் போக்குவரத்துத் துறை அலுவலா்களுக்கு இத்தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இச்செயலுக்காக அரசுப் பேருந்து நடத்துநா் ஆா். முருகேசனை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், இடைநீக்கக் காலம் முடிந்த பிறகு அவா் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படுவாா் என்றும் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT