புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 15ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்விக் குழுமத் தலைவா் ஆா்.ஏ. குமரேசன் தலைமை வகித்தாா். முதல்வா் எம். இளங்கோவன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா்.
தமிழாசிரியரும் பேச்சாளருமான மகாசுந்தா் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினாா். கல்வியியல் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் தரமதிப்பெண் பெற்றவா்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனா்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் செயலா் பி. கருப்பையா, பொருளாளா் ஆா்.எம்.வீ. கதிரேசன், கைக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவி ரெங்கநாயகி சுப. செல்வராசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். முடிவில், உதவிப் பேராசிரியா் திருவள்ளுவன் நன்றி கூறினாா்.