புதுக்கோட்டை

நேரு நினைவு தினம் அனுசரிப்பு

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை அவரின் திருவுருவப் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவா் ஏஎம்எஸ் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் நேருவின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியைத் தரக்குறைவாகப் பேசி வரும் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT