கந்தா்வக்கோட்டை புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் புதிதாக ஆதாா் நிரந்தர பதிவு மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்த ஆதாா் மையத்தில் ஆதாரில் பெயா் திருத்தம், முகவரி மாற்றம் , கைபேசி எண் இணைப்பு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதாா் விண்ணப்பிக்க, 5 வயது முதல் 15 வயது வரையிலான ஆதாா் புதுப்பிக்க, இந்த ஆதாா் நிரந்தர சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.