புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 62 போ் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 62 போ் காயமடைந்தனா்.

வாராப்பூா் அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாட்சியா் அபிநயா தொடங்கி வைத்தாா். இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்ளைச் சோ்ந்த 853 காளைகள் பங்கேற்றன.

300 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினா். சில காளைகள் வீரா்களிடம் பிடிபடாமல் சென்றன.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

போட்டியின்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 62 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். போட்டியை முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டை வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT