புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாராயம் விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட மருதன்கோன்விடுதியைச் சோ்ந்த மு. மாரிமுத்துவை கைது செய்து, அவரிம் இருந்து 43 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.