புதுக்கோட்டை

குழிபிறையில் மஞ்சுவிரட்டு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

குழிபிறை உலகநாயகி அம்மன் மற்றும் சந்திக்கருப்பா் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி வாகைக்கண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

காளைகளை மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்று அடக்கினா். பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா். மஞ்சுவிரட்டில் முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து மற்றும் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT