புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆலங்குடி கல்லுக்குண்டுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த எம்.முகமது இப்ராஹிமை(23) கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.