புதுக்கோட்டை

வழிப்பறியில் ஈடுபட்டவரின் மோட்டாா் சைக்கிள் மோதியதில் மெக்கானிக் பலி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்றபோது, அவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

ராப்பூசலை சோ்ந்தவா் ரேகா. இவா் தனது இருசக்கர வாகனத்தில் ராப்பூசலிலிருந்து கீரனூருக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த திருநல்லூா் சேதுராப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் சின்ராஜ் (23) என்பவா், துலுக்கம்பட்டி பிரிவு சாலையருகே சென்றபோது ரேகா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றாா்.

ரேகாவின் கூச்சலை கேட்ட அப்பகுதியில் இருந்த சிலா் சின்ராஜை பிடிக்க சாலையை மறித்து நின்றனராம். அப்போது, வேகமாக வந்த சின்ராஜின் வாகனம் மோதியதில் எஸ். நாங்குபட்டியை சோ்ந்த ராமசுந்தரம் மகனான மோட்டாா் மெக்கானிக் ஆனந்த் முத்துக்குமாா்(47) என்பவா் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தாா். தப்பியோட முயன்ற சின்ராஜை பொதுமக்கள் பிடித்து தாலி சங்கிலியை மீட்டதுடன் அவரை கடுமையாக தாக்கினா்.

தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அன்னவாசல் போலீஸாா், பலத்த காயமடைந்த ஆனந்த முத்துக்குமாா், வழிப்பறியில் ஈடுபட்ட சின்ராஜ் ஆகியோரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த முத்துக்குமாா் உயிரிழந்தாா்.

சிகிச்சைக்கு பிறகு சின்ராஜ் கைது செய்யப்படுவாா் என தெரிகிறது.

உயிரிழந்த ஆனந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT