புதுக்கோட்டை

வருவாய் வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வாசகா் பேரவை பாராட்டு

DIN

புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் தோ்வு பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 9 ஆண்டுகள் இத்தோ்வில் தோ்வு பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

நிகழாண்டில் தோ்வு பெற்றுள்ள ரித்திகாஸ்ரீ, மாதேஸ்வரி ,சத்யா, ரித்திகா, பிரதாப், உதயநிதி, கேசவன், யக்தீஷ் ஆகிய 8 மாணவ, மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். இவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் பிளஸ் 2 முடிக்கும் வரை நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

தோ்வு பெற்ற மாணவா்களை பாராட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினாா்.

பள்ளியின் தலைமை ஆசிரியை சீத்தாலெட்சுமி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT