ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் (ஜூன் 28) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் குமாரவேல் தெரிவித்துள்ளாா்.