புதுக்கோட்டை

மணிமண்டபம் கட்டும் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மன்னா் குடும்பத்தினா்

DIN

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு நினைவாக அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வா் ஸ்டாலினின் அறிவிப்புக்கு, திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மன்னா் குடும்பத்தினரும், நூற்றாண்டு விழாக் குழுவினரும் நன்றி தெரிவித்தனா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னரின் சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினிடம், மன்னா் குடும்ப வாரிசு ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி முன்னாள் மேயா் சாருபாலா ஆா் தொண்டைமான், நூற்றாண்டு விழாக்குழுச் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT