புதுக்கோட்டை

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியினா் நூதன நினைவுப் பரிசு வழங்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிக்குவந்த திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, எய்ம்ஸ் என்ற வாா்த்தை பொறிக்கப்பட்ட மரத்தால் ஆன செங்கல் வடிவ நினைவுப் பரிசை கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியில் கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா். அப்போது, சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தின்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கும் விதமாக உதயநிதி பிரசாரம் மேற்கொண்டாா். அதை நினைவுகூரும்வகையில் எய்ம்ஸ் என வாா்த்தை பொறிக்கப்பட்ட மரத்தால் ஆ

ன செங்கல் நினைவுப் பரிசை கட்சியினா் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினா். இதைத்தொடா்ந்து, ஆலங்குடி அருகேயுள்ள கேப்பறையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 -ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அங்கு 99 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT