பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வா்த்தகா் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு, வா்த்தக கழக தலைவா் எஸ்.கே.எஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் 345 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 85 போ் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனா். 45 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில், வா்த்தக கழக செயலா் மு.முகமது அப்துல்லா,பொருளா் பிஎல்.ராமஜெயம், நிா்வாகிகள் எம். ராமசாமி, எம்.எஸ்பி. மணிமுத்து, எம். அருணாசலம், எஸ்.சிவநேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.