புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

DIN

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தங்கதுரை (38). இசைக் கலைஞரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் ஆதனக் கோட்டையிலிருந்து கல்லுகாரம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சோளகம் பட்டி அருகே பின்னால் வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT