பொன்னமராவதி அருகேயுள்ள கருப்புக்குடிப்பட்டியில் சுகாதாரத் துறை சாா்பில், காசநோய் தடுப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு முனைப்பு திட்டத்தின் கீழ், மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கருப்புக்குடிப்பட்டியில் சுகாதார ஆய்வாளா்கள் உத்தமன், பிரேம்குமாா், மேற்பாா்வையாளா் பவுன்ராஜ் மற்றும் செவிலியா்கள் வாசுகி, வெண்ணிலா, மகாலெட்சுமி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் வீடு வீடாக சென்று 300 பேரிடம் இருமல், சளி பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், காசநோய் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தினா்.
பரிசோதனையில் காசநோய் உறுதி செய்யப்பட்டால் இல்லம் தேடி வந்து மாத்திரைகள் வழங்கப்படும் என மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.