புதுக்கோட்டை

தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழப்பு

21st Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகிலுள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் மகன் காா்த்திக் (23). குடிப்பழக்கம் உடையவா். இந்நிலையில், கந்தா்வகோட்டை அடுத்த வாண்டையான்பட்டி உடையாா்குளம் அருகே உள்ள புளியமரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்றவா்கள் காா்த்திக்கை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து காா்த்திக்கின் தம்பி சண்முகவேல் (20) கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT