விராலிமலை கிளை நூலகத்தில் நூலக வாசகா் வட்டம் மற்றும் ராவணன் பயிற்சி மையம் இணைந்து மாதிரி பயிற்சித் தோ்வை சனிக்கிழமை நடத்தினா். இதில் சிறப்பிடம் பெற்ற முதல் 3 பேருக்கு பரிசளித்துப் பாராட்டப்பட்டது.
இதேபோல, முழுப் பாடத்திற்கான இறுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. நூலக வாசகா் வட்டம், சக்தி கல்விமையம் இணைந்து நடத்தும் இத் தோ்வில் சிறப்பிடம் பெறும் மூவருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.