விராலிமலையில் மக்கள் நலப் பணியாளா்களுக்கான பயிற்சிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிசந்திரன்(கிளை ஊராட்சி), சுவாமிநாதன், ஒன்றிய மேலாளா் கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.
இதில் பணிநேரத்தில் 100 நாள் திட்டப் பணியாளா்களை நடத்துவது, பொதுமக்களிடம் கனிவாக பேசுதல், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும், பொதுமக்களுக்கு அறிவுத்த வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டது. நிறைவில், மேலாளா் கண்ணன் நன்றி கூறினாா்.
விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் நம்பம்பட்டி, கல்குடி ஊராட்சிகளை தவிர மற்ற 43 ஊராட்சிகளில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக 43 போ் அண்மையில் பணியில் சோ்ந்தனா். அவா்களுக்குத் தொகுப்பூதியமாக ரூ. 7,500 வழங்கப்படும்.