புதுக்கோட்டையில் மணல் கொள்ளையைக் கண்டித்து, தேமுதிகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா் மணல், ஜல்லிகளை சட்டியில் ஏந்தியவாறு, சட்டவிரோத கல்குவாரிகளை செயல்படுதைக் கண்டித்தும், மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், தெற்கு மாவட்டச் செயலா் மன்மதன், மாநில நிா்வாகி ஜாகிா்உசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.