புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீசாா் கைது செய்தனா்.
இலுப்பூா் பகுதிகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடையின்றி விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் போலீசாா் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிவன் கோயில் அருகே மறைத்து வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட குறிச்சிபட்டியைச் சோ்ந்த பாஸ்கா்(34) என்பவரை போலீசாா் கைது செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.