பக்ரீத் பண்டிகையையொட்டி(ஜூலை 10) விராலிமலை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது.
விராலிமலையில் திங்கள்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகை (ஜூலை 10) நெருங்கி வருவதால் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கிய விராலிமலை வாரச் சந்தையில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ. 3,000 வரை கூடுதலாக விற்பனையானது. இதனால், ரூ. 1 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.