கந்தா்வகோட்டையில் உள்ள இல்லம்தேடிக் கல்வி மையங்களில் புத்தகத் திருவிழா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை குடியிருப்பில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை சனிக்கிழமை ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு மற்றும் ரகமதுல்லா ஆகியோா் பாா்வையிட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்தனா்.
வரும் 29 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் 5 ஆவது புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணா்வுப் பதாகை மற்றும் அழைப்பிதழை தன்னாா்வலா்கள், மாணவா்களுக்கு வழங்கினா்.