புதுக்கோட்டை

இலுப்பூா் அருகே 25 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 25 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மா்மநபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

இலுப்பூா் அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சோ்ந்தவா் தா்மா்(59). பழைய இரும்புப் பொருட்கள் வாங்கி மொத்த விற்பனை செய்து வருகிறாா். இவருக்குத் திருமணமாகி 2 மகள்கள், மகன் உள்ளனா். மனைவியை இழந்து தனியே வசித்து வரும் தா்மா் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள், பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், ரூ. 50 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, இலுப்பூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT