புதுக்கோட்டை

குடும்பத் தகராறில் இளைஞருக்கு வெட்டு

DIN

கந்தா்வகோட்டை அருகே குடும்பத் தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டியதில் வியாழக்கிழமை ஒருவா் படுகாயமடைந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெரியமனைகொல்லை கிராமத்தில் வசித்துவரும் முத்துச்சாமி மகன் அஞ்சப்பன் (46). இவருக்கும், அதே தெருவில் வசித்துவரும் ராமையன் மகன் பாண்டியன் என்பவருக்கும், குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், அஞ்சப்பனை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் அஞ்சப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து பாண்டியனைப் போலீசாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT