மொழிப் போா் தியாகிகள் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மொழிப் போா்த் தியாகிகள் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் முல்லை முபாரக், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தமிழ்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மொழிப் போா்த் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.